கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு!

கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி- 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இவை புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பெய்த அடை மழையினால் அவை வெளியே வந்துள்ளன.

இது விடயம் தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப்படையினர் அவற்றை இன்று
மீட்டுள்ளனர்.

இதன்போது ரி – 56 ரக துப்பாக்கிகள் 05, ரவைக்கூடு ஒன்று மற்றும் 30 ரவைகளும்
மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் சூட்டு பயிற்சி இடம்பெறும் பகுதி என்பதால் அவை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக
இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட பொருட்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின்
அறிவுறுத்தலிற்கு அமைவாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles