இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சி.எல்.எவ். அலுவலகத்தில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அக்கரபத்தன பிரதேச சபையின் தவிசாளர் கலந்துகொண்டுள்ளார் என தகவலகள் வெளியான போதிலும், அவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இக்கூட்டத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் சிலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அக்கரபத்தன தவிசாளர் அன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அந்தக் கட்சித் தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும், நாளை முதல் புலனாய்வு அதிகாரிகள் குறித்த கூட்டத்திற்கு வந்துசென்றவர்கள் குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் குருவிக்கு உறுதிப்படுத்தினார்.
இதன்பின்னர், எவ்வாறாயினும், கொட்டகலை, தலவாக்கலை பிரதேச சபை தவிசாளர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, குறித்த அக்கரபத்தன தவிசாளர் கலந்துகொண்டகூட்டங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் இருவர் மட்டும் தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையோரை தனிமைப்படுத்துவதற்கான பணிகள் அடுத்த சில நாட்களில் முன்னெடுக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.
