கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 57 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 8 கோடியே 2 லட்சத்து 7 ஆயிரத்து 155 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 5 கோடியே 64 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் 39 ஆயிரத்து 782 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 31 ஆயிரத்து 339 பேர் குணமடைந்துள்ளனர். 186 பேர் உயிரிழந்துள்ளனர். 8 ஆயிரத்து 257 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles