செம்மணி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் உள்ள மனித புதைக்குழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதிக்கோரிய கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இக்கையெழுத்து மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் போராட்டத்தில் யாழ். மருதனார்மடம் வர்தகர்கள் சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.