கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 195 ஆக உயர்வு!

கொரோனா’ வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 182 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

Related Articles

Latest Articles