பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

 

உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

Related Articles

Latest Articles