கொரோனா தொற்றாளர்கள் ஐவர் தப்பியோட்டம்!

பொலன்னறுவை கல்லேல பகுதியில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் ஐவர் இன்று தப்பியோடியுள்ளனர்.

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த கைதிகளில் ஐவர் சிகிச்சைகளுக்காக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.

இவர்கள் ஐவரும் போதைப்பொருளுக்கு அடிடையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கண்டுபிடித்து, கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

Related Articles

Latest Articles