ஆயிரம் கதைகூறி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் அவர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. அதன்பின்னர் 2021 ஜனவரி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. எனினும், இன்னும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எனவே, தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் ,அவர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” எனவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles