6ஆவது நாளாகவும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட காட்மோர் தனியார் தோட்டத்தில் 4 பிரிவுகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இன்று 6 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தமக்கான சேவை கொடுப்பனவைக் கோரியும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன முறையாக செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மேற்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே, தோட்டத்தை புதிய நிர்வாகத்திடம் கையளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.   நிர்வாகத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் தொழிலாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Related Articles

Latest Articles