இந்திய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து அணி!

 

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது.

இந்திய மண்ணில் சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

தொடர்ந்து ராஜ்கோட்டில் நடை பெற்ற 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறியது. எனினும் டாரில் மிட்செல் (137) மற்றும் கிளென் பிலிப்ஸ் (106) ஆகிய இருவரின் அதிரடி சதங்கள் அணியைப் ஸ்கோரை உயர்த்தின.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

338 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிப் பதிலடி கொடுத்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
71 ஓட்டங்களுக்குள்ளேயே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், விராட் கோஹ்லி நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார்.

அவர் 108 பந்துகளில் 124 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு நம்பிக்கையளித்தார். அவருக்குத் துணையாக நிதிஷ் குமார் ரெட்டி (53) மற்றும் ஹர்ஷித் ராணா (52) ஆகியோர் அரைசதம் அடித்து அதிரடி காட்டினர்.

ஆனால், கோஹ்லியின் விக்கெட்டுக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசை சரிந்தது. இறுதியில் 46 ஓவர்களில் இந்திய அணி 296 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து தரப்பில் ஜாக் ஃபால்க்ஸ் மற்றும் கிறிஸ்டியன் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியைத் தடுத்தனர்.

2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா சந்திக்கும் முதல் ஒருநாள் தொடர் தோல்வி இதுவாகும். 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு (37 ஆண்டுகள்) இந்திய மண்ணில் நியூசிலாந்து பெறும் முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles