“எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? ஆதனை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா?” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்றுதானே சுவிஸில் இருந்து அவசரமாக வந்தேன், அந்த பிரேரணை எங்கே எனவும் அவர் சிரித்தப்படியே வினா தொடுத்தார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து இன்று பிற்பகல் நாடு திரும்பிய கையோடு நாடாளுமன்றம் வந்தார் பிரதமர்.
சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு, எதிரணிக்கு உரிய பதிலடி கொடுத்தார்.










