புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன : அரசியலமைப்பு பேரவை ஒப்புதல்!

சமுதிகா ஜயரத்னவை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (03) கூடியது.

இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகப் பதவிக்கு ஜனாதிபதியால் இதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நான்கு பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதியால் ஐந்தாவது தடவையாக அனுப்பட்டுள்ள பெயருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மூன்று சிவில் பிரதிநிதிகள் உட்பட 10 பேர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles