‘சமனொல சிறி – பசுமை யாத்திரை தேசிய வேலைத்திட்டம்

‘Clean Sri Lanka’ செயலகத்தால் முன்னெடுக்கப்படும் ‘சமனொல சிறி – பசுமை யாத்திரை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சிவனொளிபாத மலை புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றும் விசேட அதிரடிப்படை நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக, சிவனொளிபாத மலை புனித தலத்தின் நல்லதன்னி மற்றும் இரத்தினபுரி பிரவேசப் பாதைகளில் மேற்கொள்ளப்படும் ஒரு நாள் சிரமதான நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) வெற்றிகரமாக ஆரம்பமாகியது.

அரச நிறுவனங்கள், முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் இணைந்து, பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, இன்று (19) மு.ப 05.45 க்கு நல்லதன்னி பொலிஸ் நிலையம் அருகில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி மற்றும் ‘Clean Sri Lanka’ செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ‘Clean Sri Lanka’ வேலைத் திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், பிரஜைகளின் மனப்பாங்கு விருத்திக்கான புதிய அணுகுமுறைகளைப் பெறவும் வழிவகுக்கும். மேலும், பெறுமதிமிக்க மற்றும் சுற்றாடல் பாரம்பரிய மதத் தளமாக இந்தப் புனிதப் பிரதேசத்திற்கு, சுற்றுலா ஈர்ப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது.

அத்துடன், உணர்திறன் மிக்க சுற்றாடல் வலயமான சிவனொளிபாத மலை புனிதப்பிரதேசத்தின் சுற்றாடல் கட்டமைப்புக்கு பாதிப்பை விளைவிக்கும் செயல்கள் அல்லது நடத்தைகளில் ஈடுபடாமல் இருப்பது குறித்தும் இதன்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேற்கண்ட திட்டத்திற்கு இணையாக, பக்தர்களிடையே ஒழுக்கநெறிமுறை பண்புகளை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு திட்டங்களும் இந்த வருடம் சிவனொளிபாத யாத்திரை காலம் முழுவதும் ‘Clean Sri Lanka’ கருத்தியலின் கீழ் முன்னெடுக்கப்படும்.

அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் ‘ வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, சிறந்த மனப்பாங்குடன் கூடிய ஒழுக்கநெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்குவதன் மூலம் சுற்றாடலை நேசிக்கும் மற்றும் சுற்றாடல் நிலைபேற்றுத்தன்மையை மதிக்கும் பிரஜைகளை உருவாக்குவதற்காக ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் சுற்றாடல் தூணின் கீழ் செயற்திட்டங்கள் மற்றும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles