மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்துகிறது சீனா! மக்கள்மீதான தாக்குதலுக்கு கண்டனம்!!

உக்கிர போர் சூழலுக்கு மத்தியில், மத்திய கிழக்குக்கான சீனாவின் சிறப்பு தூதுவர் Zhai Jun, சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமைதி முயற்சியை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளது என தெரியவருகின்றது.

வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பையும், ஸ்தீரத்தன்மையையும் உறுதிப்படுத்த சவுதியுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

சவுதி வெளிவிவகார அமைச்சர் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவருடன் நடத்திய ஆலோசனையில், பிராந்தியத்தின் இறைமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் இராணுவமற்ற இலக்குகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்த சீனா, இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் இந்த நகர்வு, தற்போதைய பதட்டமான சூழலில் ஒரு முக்கியமான சமரச முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது பிராந்திய அமைதிக்காக சர்வதேச நாடுகளுடன் சீனா கொண்டுள்ள உறவின் வலிமையை வெளிப்படுத்துகிறது.

Related Articles

Latest Articles