எரிசக்தி அமைச்சரின் ‘தலை’ குறிவைப்பு: 18 ஆம் திகதி பிரேரணை கையளிப்பு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த
தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மார்ச் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி, 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்நிலையிலேயே எம்.பிக்களிடம் நாளை கையொப்பம் பெறப்பட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தரமற்ற நிலக்கரி இறக்குமதி என்பன உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே மேற்படி பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles