மார்ச் மாதத்துக்குரிய இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு இன்று 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
முக்கிய சில விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன. சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைகள்மீதான விவாதங்களும் இடம்பெறவுள்ளன.
மத்திய கிழக்கு போர்ச்சூழல் மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் பற்றியும் ஆளும் மற்றும் எதிரணிக்கிடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறக்கூடும்.
