நாட்டில் இன்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.
பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதம் உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 27 இலிருந்து ரூ. 30 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.










