மலையக அரசியல் அரங்கத்தின் தென் மலையக மாவட்டங்களுக்கான அமைப்பாளராகவும் உயர்பீட குழு உறுப்பினராகவும் காலி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஷ்க்க இரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற அரங்கத்தின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கி வைகைகப்படைடமை குறிப்பிடத்தக்கது.
காலி மாவட்ட இளைஞர் சம்மேளனங்களின் உறுப்பினராக செயற்பட்ட கவிஷ்க்க இரவீந்திரன் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மலையக அரசியல் அரங்கத்தின் அமைப்புச் செயற்பாடுகளை விஸ்தரிக்க ஏதுவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என அரங்கத்தின் உயர் பீடம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
