கிராந்துருகோட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
21 வயதுடைய இலக்கம் 143, சந்தன கம, தெஹிஅத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரும் , 23 வயதுடைய இலக்கம் 82, சந்தன கம , தெஹிஅத்கண்டிய பகுதியைச் சேர்ந்த நபர்கள் இருவரே இவ்வாறு உந்துருளி விபத்தில் உயிரிழந்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் ( 07/04) கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலகன்வெவ சந்தியில் சுமனசிரி கடைக்கு அருகில் மஹியங்கனைப் பக்கமாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி வீதி ஓரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதில் உந்தருளியை செலுத்திய நபரும் பின் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
R.T.பசறை
