பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை

 

“Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (07) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இந்தக் கூட்டத்தில், “Rebuilding Sri Lanka” திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ், “டித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு பிரதமர் பணிப்புரை வழங்கியதுடன் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை முறையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி செயலணியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழுக்கள் மற்றும் உபகுழுக்களின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது “டித்வா” சூறாவளி தொடர்பாக தயாரிக்கப்பட்ட பேரிடருக்குப் பின்னரான தேவைகள் மதிப்பீட்டு அறிக்கை (Post Disaster Needs Assessment — PDNA) , பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவினால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் “Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணியின் செயலாளர் ரசல் அபொன்சு, ஜனாதிபதி ஆலோசகர் பராக்கிரம திசாநாயக்க, PAFFREL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி ஆகியோரும் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles