அமெரிக்காமீது ஈரானுக்கு நம்பிக்கை இல்லை!

கடந்த கால கசப்பான அனுபவங்களால் அமெரிக்கா மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஈரானியக் குழுவினரின் நம்பிக்கையைப் பெற அமெரிக்கத் தரப்பு தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதே வேளையில், இந்த இராஜதந்திர நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த பாகிஸ்தான் நாட்டிற்குத் தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles