அமெரிக்காவுடனான அடுத்தகட்ட அமைதி பேச்சுவார்த்தை குறித்து தெளிவான தகவல்கள் இல்லை என்று ஈரான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
முதல்சுற்று அமைதி பேச்சு தோல்வியடைந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம் என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, அமெரிக்க ஜனாதபிதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த தற்காலிக போர்நிறுத்தம் எதிர்வரும் 22 ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருவாரகால போர் நிறுத்தம் கடந்த 8 ஆம் திகதி அமுலுக்கு வந்தது.










