‘தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபா அவசியம்’

ஆயிரம் ரூபாவில் வாழ்க்கை நடத்த முடியாது. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,500 ரூபா வழங்கபட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க இன்னும் முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வரவு செலவு வாசிப்பின் போது ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முதலாளிமார் சம்மேளனம் முன்வாராது என்று எனக்கு நன்றாக தெரியும்.

அரசாங்கம் முன்மொழிந்ததை போல் ஆயிரம் ரூபா மாத்திரம் அல்ல இதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்து சமுர்த்தி கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும்.

ஆகையால், அரசாங்கம் இதற்கான முழு பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெருந்தோட்ட நிறுவனங்கள் இன்று நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறார்கள்.அப்படி என்றால் அரசாங்கத்திற்கு அதற்கான நிதியினை வழங்கி அதனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியும்.

இது போன்ற நடடிவடிக்கையினை அரசாங்கம் ஒரு போதும் செய்யாது. இவர்கள் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொள்வார்கள். ஆயிரம் ரூபா தருவதாக கூறுகிறார்கள், வீடு தருவதாக கூறுகிறார்கள். ஆனால், ஒன்றுமே நடைமுறைக்கு வருவதில்லை

Related Articles

Latest Articles