பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது.
அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும் அம்பாறை – உஹன – மஹஓயா வீதியை புனரமைப்பதற்கான கருத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 2.4 மில்லயின் அமெரிக்க டொலர்கள் எஞ்சுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த மீதிக் கடன்தொகையைப் பயன்படுத்தி, 15 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பயன்படுத்தியுள்ள மற்றும் தித்வா புயல் அனர்த்தத்தால் மோசமாக சேதமடைந்துள்ள 1.5 கிலோமீற்றர் வீதியை (கிலோமீற்றர் 119+620 தொடக்கம் கிலோமீற்றர் 121+200
வரை) புனரமைப்பு உள்ளிட்ட, பேராதனை – பதுளை – செங்கலடி வீதியின் (யு05) பதுளை – ஹாலிஎல வீதியின் 06 கிலோமீற்றர் பகுதியை (கிலோமீற்றர் 115 தொடக்கம் 121 வரை) 600 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவின் கீழ் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.










