துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த மாதம் ஈரானுடன் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் ‘முடிவுக்கு வந்துவிட்டது’ என்று கூறினார்.
அமெரிக்க இராணுவம் நேற்றிரவு ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி, மீண்டும் விரோதப் போக்கைத் தொடங்கியதைத் தொடர்ந்து டிரம்பின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் சென்ற மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கி புதன்கிழமை அன்று ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் (drones) மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதல் போக்கு, மசகு எண்ணை விலையை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயரச் செய்துள்ளது.
ஈரானுடனான ஒப்பந்தம் ‘முடிவுக்கு வந்தது’ என டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து மசகு எண்ணை விலை 6% மேல் உயர்வு
ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தம் “முடிவுக்கு வந்துவிட்டது” என்று டிரம்ப் கூறியதை அடுத்து, மசகு எண்ணை விலை 6%-க்கும் அதிகமாக உயர்ந்து, இரண்டு வாரங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டது.
ஈரானிய மசகு எண்ணெய் விற்பனைக்கு அங்கீகாரம் அளிக்கும் பொது உரிமத்தை (general license) அமெரிக்கா செவ்வாயன்று ரத்து செய்ததை அடுத்து, ப்ரெண்ட் மசகு எண்ணை (Brent crude) மற்றும் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணை விலைகள் ஏற்கனவே சுமார் 3% உயர்ந்திருந்தன.
இந்த நிகழ்வுகளுக்கு முன்னதாக, கடந்த மாதம் அமெரிக்காவும் ஈரானும் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, மசகு எண்ணை விலை போருக்கு முந்தைய நிலைக்குக் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.










