ஆமைகளை கடத்திய நால்வர் கைது

ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து முற்சக்கர வண்டியில் மஹதிவுல்வெவ பகுதிக்கு 03 ஆமைகளை கொண்டு சென்ற நான்கு பேரை நேற்று (16) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரொட்டவெவ சோதனை சாவடியில் முற்சக்கர வண்டியை சோதனையிட்டபோது ஆமைகள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 40 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்

Related Articles

Latest Articles