கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மித்தந்தவாறு இருப்பதாகவும், இது குறித்து மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய கடல் நீரோட்டத்தின் தன்மையின்படி, இந்தக் காலியான கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கரையோரக் கடற்பகுதியை நோக்கி மிதந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் பலநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவேளை மிதந்து வரும் இக்கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து:
மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ (Radio Message Centre) அல்லதுஅருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோதகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.










