உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் போது, கடமையிலிருந்து தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மேல்நீதிமன்றம் விதித்த மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பூஜித் ஜயசுந்தரவின் சட்டத்தரணி ரொஷான் தெஹிவல ஊடகங்களிடம் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.










