ட்ரம்பின் உத்தரவையடுத்து 5 நாளாக சுருங்கிய அமெரிக்கா, தென்கொரியா போர் பயிற்சி

தென் கொரியாவில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து நடத்தும் ஆண்டாந்திரக் கூட்டு ராணுவப் பயிற்சியின் நாட்களை 11 நாட்களிலிருந்து 5 நாட்களாகக் குறைக்கப் போவதாகவும், களப் பயிற்சிகளைக் கட்டுப்படுத்தப் போவதாகவும் இரு நட்பு நாடுகளும் புதன்கிழமை தெரிவித்துள்ளன.

கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியாவிற்கு வருகை தரும் நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஆகஸ்ட் 17 அன்று தொடங்கிய ‘உல்ச்சி ஃபிரீடம் ஷீல்ட்’ (Ulchi Freedom Shield) ராணுவப் பயிற்சி, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 27 வரை நடைபெறாமல், ஆகஸ்ட் 21-ஆம் திகதியுடன் முடிவடையும் எனத் தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைமையகமும் பென்டகன் அதிகாரியும் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட தற்காப்புப் பயிற்சிக்குப் பிறகு எதிா்த்தாக்குதல் நடவடிக்கைகளை உள்ளடக்கிய இரண்டாம் கட்டப் பயிற்சியை ரத்து செய்ய இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஆன் கியூ-பேக் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் பரிந்துரையின் பேரில், பயிற்சியின் கால அளவு மற்றும் வரம்புகளில் பகுதி மாற்றங்களைச் செய்ய ஒப்புக்கொண்டதாகத் தென் கொரியக் கூட்டுப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. சில கூட்டுப் படை நகர்வுப் பயிற்சிகளும் குறைக்கப்படும், இருப்பினும் அதுகுறித்த விவரங்கள் இன்னும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

பயிற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நேரடிப் போர்ப்பயிற்சிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு, சில ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அல்லது கணினி உருவகப்படுத்துதல் (Simulations) முறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த மாற்றங்கள் அத்தியாவசிய தயார்நிலை மற்றும் பயிற்சி இலக்குகளைத் தக்கவைக்கும் என்றும் அமெரிக்காவின் பயிற்சி நோக்கங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த அதிகாரி மேலும் சேர்த்தார்.

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான தமது “மிகச் சிறந்த உறவைக்” குறிப்பிட்டு, பயிற்சியில் அமெரிக்காவின் பங்கைக் “கணிசமாகக் குறைக்குமாறு” டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles