2030 வரை கடன் செலுத்த திட்டம் தயார் – பொருளாதார நெருக்கடி அச்சத்தை நிராகரிக்கும் அரசு

2027/2028 காலப்பகுதியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு அந்நிய செலாவணி கையிருப்பை மட்டும் அடிப்படையாகக் கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அந்நிய செலாவணி கையிருப்பு என்பது நாட்டுக்கான வெளிப்புற பாதுகாப்புக் கையிருப்பாகும் என்றும், பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப அது ஏற்ற இறக்கங்களை சந்திக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். அதேவேளை, பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்துக்கொண்டே நாட்டின் வெளிப்புற நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

2023ஆம் ஆண்டு இலங்கைக்காக நிர்ணயிக்கப்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பு இலக்குகளைக் கூட சர்வதேச நாணய நிதியம் (IMF), பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு திருத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதும் இதில் முக்கிய காரணியாக இருந்ததாக தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்காக இதுவரை சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் (Letters of Credit) திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்திருந்தால், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மேலும் 3.5 பில்லியன் டொலர்களால் அதிகரித்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இலங்கை ஏற்கனவே சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும், இறக்குமதிக்காக கையிருப்பைப் பயன்படுத்திய போதிலும் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.6 பில்லியன் டொலராக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2030 வரை கடன் செலுத்தும் திட்டம்

2030ஆம் ஆண்டு வரை இலங்கை செலுத்த வேண்டிய கடன்களுக்கான திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். மேலும் 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் Domestic Dollar Bonds (DDB) தொடர்பான நிலுவைக் கடன்கள் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

அதன்படி இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்கள்:
2028 – 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்
2029 – 3 பில்லியன் அமெரிக்க டொலர்
2030 – 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்

2028க்குப் பின்னர் இருதரப்பு கடன்கள், பல்தரப்பு கடன்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் (ISB) தொடர்பான கடன் பொறுப்புகளே முக்கியமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2028 முதல் கடன் திருப்பிச் செலுத்தலை ஆரம்பிப்பதற்கு இலங்கை தனது அந்நிய செலாவணி கையிருப்பை சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்க வேண்டும் என்றும், பத்திர வெளியீடுகள் மூலம் மேலும் சுமார் 3 பில்லியன் டொலரை திரட்ட வேண்டியிருக்கும் என்றும் அண்மையில் எச்சரித்திருந்தார். இதுவே நாட்டுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles