22ஆவது திருத்தம்:13 நீதியரசர்கள் கொண்ட முழுமையான அமர்வு வேண்டும்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து முதல் 24 மணிநேரத்திற்குள், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் இதற்கு முன்னர் 21 தடவைகள் திருத்தச்சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், இந்த அளவிற்கு மனுக்கள் குவிந்தது கிடையாது.

எனவே, உயர்நீதிமன்றத்தில் தற்போதுள்ள 13 நீதியரசர்களையும் கொண்ட முழுமையான நீதியரசர்கள் அமர்வே இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த 22 ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயக கலாசாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவதற்கு நீதித்துறையின் சுயாதீனம் என்பது மிக முக்கியமானதொரு நிபந்தனையாகும்.

எனவே, அரசாங்கம் இந்த 22 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி நீதித்துறையின் சுயாதீனத்தைக் கேள்விக்குறியாக்கினால், ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு நடக்குமாயின், அது இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பாரிய மரண அடியாக அமையும்” என ஜி.எல்.பீரிஸ் எச்சரித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles