நேபாள பேரழிவு 903 பேர் உயிரிழப்பு: 20 நிமிட தாமதத்தால் தப்பிய 31 பயணிகள்

நேபாளத்தில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் ஏற்பட்ட 20 நிமிட தாமதமே, தங்களின் உயிரைக் காப்பாற்றியதாக இந்தியா கேரளாவைச் சேர்ந்த 31 பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல்வேறு வயதினர் அடங்கிய இந்தக் குழுவினர் பயணத்தின்போது பெண்களின் கோரிக்கையின் பேரில், அந்த புத்தர் கோயிலில் சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் இருந்துள்ளனர்.

இந்த தாமதம்தான் அவர்களின் உயிரைக் காப்பாற்றியது என அக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

“இந்த தாமதம் இல்லாமல் இருந்திருந்தால், முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்ட பாலம் மற்றும் சாலையை நாங்கள் அப்போது கடந்திருப்போம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, காத்மாண்டுவிலிருந்து பொகராவுக்கு செல்லும் வழியில் பொலிஸார் இந்தக் குழுவினரைத் தடுத்து நிறுத்தினர்.

அந்த நேரத்தில், சுமார் 600 அடி கீழே மக்கள் ஓடி ஒளிந்து கொண்டிருப்பதை அக்குழுவினர் பார்த்தனர். அடுத்த சில வினாடிகளிலேயே பெரும் வெள்ளப்பெருக்கு அந்தப் பகுதியில் இருந்த கட்டிடங்களை முழுவதுமாக அடித்துச் சென்றது, அந்த இடம் சமவெளியாக மாறியதை அவர்கள் நேரில் கண்டனர்.

அதன் பிறகு, பாதுகாப்பான இடத்தை நோக்கி இரவு முழுவதும் கடினமான பாதையில் அக்குழுவினர் சென்றனர். அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்க முடியாமல், சரியான உணவும் இன்றி அந்த இரவை அவர்கள் கழித்தனர்.

பின்னர், வெள்ளத்தில் பலர் உயிரிழந்த செய்தி அறிந்தபோது, தங்கள் சிரமங்கள் மற்றவர்களின் துயரத்தை காட்டிலும் மிகவும் சொற்பமானது என உணர்ந்தனர்.

கொச்சி விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் குடும்பத்தினரைச் சந்தித்தபோது உணர்ச்சிபூர்வமான காட்சிகள் அரங்கேறின. பலர் கண்ணீர் மல்கத் தங்களது உறவினர்களைக் கட்டியணைத்துக் கொண்டனர்.

அதேவேளை, நேபாளம் பேரழிவில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளது. 4,200 பேர் காணாமல் போயுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles