லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கிவுலேகம பகுதியில் ஒருவர் கட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக லுணுகலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் குறித்த பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபரை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் லுணுகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
த.டிமேஷன்










