3 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தில் நால்வருக்கு கொரோனா

மஹியங்கனையில் மூன்று வயதுச் சிறுமியொருவர் உட்பட குடும்பத்தில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, மஹியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தார்.

மூன்று வயதுச் சிறுமியின் தாய், தந்தை, சகோதரி ஆகியோருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக, மஹியங்கனையில் மேறகொள்ளப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனையில் இன்று 25.01.2021 தெரியவந்துள்ளது.

இக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கொழும்பில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றிவிட்டு, விடுமுறையில் குறிப்பிட்ட இவ் வீட்டிற்கு வந்துள்ளார். மூன்று தினங்கள் அவ்வீட்டில் தங்கியிருந்து, மீளவும் கொழும்பின் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியது.

இவரினாலேயே, அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, மஹியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுக்கிழக்காகியுள்ள மேற்குறிப்பிட்ட நால்வரும், காகொல்லை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 25.01.2021ல் அனுப்பப்பட்டுள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles