பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் தோல்விகண்டுவிட்டது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
” நாட்டில் எல்லா விடயங்களிலும் தோல்விகளை சந்தித்துவரும் அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்திலும் தோல்வி கண்டுள்ளது. எனினும், தோல்வியை ஏற்காமல் , சமாளிப்பு பாணியில் காலத்தை கடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அமைச்சரவை தீர்மானம், பேச்சுவார்ததை எல்லாம் இதன் ஓர் அங்கம்தான். தீர்மானம் எடுக்கலாம். ஆனால் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமாகவே இருக்கின்றது.” – என்றும் அவர் கூறினார்.
