3 நாட்களில் கொழும்பில் 709 பேருக்கும் நுவரெலியாவில் 37 பேருக்கும் கொரோனா

கடந்துள்ள   நாட்களில் மாத்திரம் (பெப்ரவரி 1 முதல் 3 வரை) 2 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 709 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 367 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் ஆயிரத்து 136 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

மத்திய மாகாணத்தில் கடந்துள்ள 3 நாட்களில் கண்டி மாவட்டத்தில் 234 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 37 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 53 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles