இம்மாதத்தில் கடந்துள்ள 5 நாட்களில் மாத்திரம் (பெப்ரவரி 1 முதல் 2 வரை) 3 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 144 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 516 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் ஆயிரத்து 261 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.
மத்திய மாகாணத்தில் கடந்துள்ள 5 நாட்களில் கண்டி மாவட்டத்தில் 429 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 48 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 67 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.










