மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபாவும், பட்ஜட் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அரசாங்க தரப்பில் 3 பேரும் தொழிற்சங்கம் சார்பாக 8 பேரும் தோட்ட கம்பனிகள் சார்பாக 8 பேரும் பேச்சு வார்த்தையில் கலந்துக்கொண்டனர்.
