ஹட்டன், எபோட்சிலி தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலை கூரையில் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து பலியாகியுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய சுப்ரமணியம் அருணாசலம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொழிற்சாலையின் உரக்களஞ்சியசாலையில் உள்ள கூரையில் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்தபோதே அவர் கீழே விழுந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
