தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் தின நிகழ்வு நாளை ஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற உள்ளது.
சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரதின் ஆலோசனையில் மகளிர் அணி தலைவி சரஸ்வதி சிவகுரு தலைமையில் காலை 9 மணிக்கு நிகழ்வும் ஆரம்பமாகும்.
இந்த நிகழ்வில் சங்கத்தின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப் முன்னாள், மாகாண சபை உறுப்பினர்கள் , பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள், மாதர் சங்க தலைவிகள், தோட்ட தலைவிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
