நுவரெலியா, ஹேவாஎட்ட – ஹங்குராங்கெத்த பிரதேச செலயகத்துக்குட்பட்ட ருக்வூட் தோட்டத்தில், தனி வீட்டுத் திட்டத்தில் வாழும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இன்னும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, தமக்கான அடிப்படை – உட்கட்டமைப்பு வசதிகளை விரைவில் செய்துகொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேற்றப்பட்டிருந்த 24 குடும்பங்கள் ருக்வூட் பகுதியில் தனி வீட்டுத் திட்டத்தில் 2018 இல் குடியமர்த்தப்பட்டனர். 50 வீடுகள் கட்டப்பட்டிருந்தாலும் 24 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தன. எனினும், நல்லாட்சியால் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.
இன்றளவிலும் அம்மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். எனவே, இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானாவது தமக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கலகா நிருபர் – ரம்யா










