திருகோணமலையில் விபத்து – நால்வர் காயம்!

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் மஹதிவுல்வெவ பகுதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.   இன்று மாலை 4.45 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் நொச்சிகுளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கதிரவேல் மனோஷன் (31வயது) , விஜயகுமார் பிரதாப் (20வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.   ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles