கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

கோணாவில் மத்தியை சேர்ந்த செல்வநாயகம் விதுசன் வயது 25 என்ற இளைஞனே
தவறான முடிவெடுத்து இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தேவேளை கடந்த வாரம் இதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் யுவதி
ஒருவரும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக தற்கொலைகள், அதிகரித்து
வருகின்றதோடு குறிப்பாக இளம் சமூகத்தினர் அதிகளவில் தற்கொலை
செய்துகொள்கின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

Related Articles

Latest Articles