ஏப்ரல் 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 08.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.










