ஜீவன், சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு : மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆய்வு

புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் தொகுதிவாரியான தேர்தல் முறைமையில் தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு தமது மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

 

Related Articles

Latest Articles