இரத்தினபுரியில் தேயிலை தொழிற்சாலை பஸ் விபத்து – 15 பேர் படுகாயம்!

இரத்தினபுரி, நிவித்திகல பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஏனைய சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கலவான பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற மினி பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles