‘கொரோனா’வால் வீட்டிலேயே மேலும் 7 மரணங்கள் பதிவு’

நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று ஒருவரும், மே 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை 42 பேரும் உயிரிழந்துள்ளனர்.

31 ஆண்களும், 12 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 39 வயதுக்கும் குறைவானவர்கள்.

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும்போது 36 பேரும், வீட்டிலேயே 7 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை கொரோனாவால் நாட்டில் இதுவரை ஆயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles