08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலும் தலைதூக்கும் அபாயம்!

நாட்டில் தற்போது நிலவும் அதிக மழையுடனான காலநிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் கடந்த மே மாதத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் நீர் தேங்குவதன் காரணமாக எதிர்வரும் ஒரு மாதத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டில் 7 ஆயிரத்து 873 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles