நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி, மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே பயணத்தடையை நீடிப்பது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரச உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி இது விடயம் தொடர்பில் தமிழ் வார இதழொன்றும் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியிலும் வைரஸ் தொற்று வீதம் குறையவில்லை. எனவே, பயணத்தடை 21 ஆம் திகதிவரை நீடிக்குமாறு அரச உயர்பீடத்திடம் சில சுகாதார தரப்புகள் கோரிக்கை முன்வைத்துள்ளன.
எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
அதேவேளை, நாட்டில் நாளை முதல் பயணத்தடை விதிமுறைகள் கடுமையாக அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
