மேலுமொரு டொல்பினின் சடலம் கரையொதுங்கியது!

வாத்துவ – தல்பிட்டிய கடற்பரப்பில் உயிரிழந்த மற்றுமொரு டொல்பினின் உடல் இன்று (07) காலை கரையொதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய டொல்பின் உடல் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதேவேளை, நாட்டின் மேற்கு கடற்பரப்பில் உயிரிழந்த 7 ஆமைகள் மற்றும் டொல்பின் ஒன்றின் உடல் நேற்று (06) கரையொதுங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – நியுஸ்பெஸ்ட்

Related Articles

Latest Articles